
ஜ.நா செயலாளர் நாயகத்தின் அறிவிப்பை தொடர்ந்து இலங்கை அரசின் சமாதான பேச்சுவார்த்தை குழுவினர் நோர்வே சென்றனர்.
இலங்கையின் சமாதான பேச்சுக் குழுவின் தலைவராக இருந்த அமைச்சர் நிமால் சிறீ பால டீ சில்வா தலைமையிலான குழுவினர் நோர்வே சென்று நோர்வேயின் இலங்கைக்கான சமாதான தூதுவரும் நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்கைமை சந்தித்தனர்.
எரிக் சொல்கைம்முக்கும் இலங்கை தூதுக்குழுவினருக்குமான பேச்சுவார்த்தை நேற்றயதினம் நோர்வே வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்றது.
இலங்கையில் நடைபெற்ற யுத்த நிறுத்த மீறல்கள் இறுதி யுத்தம் ஜ.நா செயலாளர் நாயகம் கடந்தவாரம் தமிழ் ஊடகத்துறைக்கு தெரிவித்த கருத்துகள் ஜ.நா நிபுணர் குழு அறிக்கை இலங்கையில் தொடரும் கொலைக் கலாச்சாரம் அபிவிருத்தி மற்றும் இடைத்தங்கல் முகாம் விவகாரம் உட்பட நீண்ட பேச்சுகள் நோர்வே அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நடைபெற்றதாக இலங்கை தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
நோர்வேயில் தங்கி இருக்கும் இலங்கை அமைச்சர் குழுவினர் நோர்வேயில் பல சுற்று பேச்சுகளில் ஈடுபட உள்ளதாக தெரியவருகிறது.
மிகவும் இரகசியமான முறையில் இலங்கை அரசால் ஏற்பாடு செய்யபட்ட இந்த பேச்சுகள் தொடர்பாக செய்திகளை இலங்கையிலும் சர்வதேசத்திலும் வெளியிடுவதற்கு இலங்கை தூதுவராலயமும் இலங்கை அரசும் மறுத்து வருகின்றது.


0 comments:
Post a Comment